News Just In

12/01/2020 11:25:00 AM

வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; பிரதிப்பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு..!!


நாட்டில் கடந்த இரண்டு மாதங்களின் பின்னர் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதிப்பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை நேற்றைய நாளில் இடம்பெற்ற 6 வாகன விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகளின் கவனயீனம் காரணமாகவே விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பிரதிப்பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: