News Just In

11/26/2020 09:48:00 AM

மாவீரர் நாளை வீடுகளில் இருந்தே அனுஷ்டிப்பதற்கு தீர்மானம்..!!


இந்தமுறை மாவீரர் நாளை, தங்களது இல்லங்களில் இருந்தே அனுஷ்டிப்பதற்கு, தமிழ் தேசியப்பரப்பில் இயங்குகின்ற கட்சிகள் கூட்டாக முடிவு செய்து அறிவித்துள்ளன.

மக்கள் ஒன்று கூடி பொதுஇடங்களில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்துவதற்கு நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ளன.

இந்தநிலையில், நேற்றையதினம் வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் இல்லத்தில், கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஒன்று கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.

இந்த கலந்துரையாடலின் பின்னர், சீ.வி.கே. சிவஞானம் இந்த அறிவித்தலை விடுத்தார்

No comments: