News Just In

10/27/2020 09:33:00 AM

மட்டக்களப்பு- போரதீவுப்பற்று பிரதேச சபை வரவு செலவு திட்டம் மேலதிக எட்டு வாக்குகளினால் வெற்றி!!


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் நேற்று (2020.10.27) சபையில் மேலதிக எட்டு வாக்குகளினால் வெற்றிபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேசபையின் வரவு செலவுதிட்டத்தினை அங்கீகரிப்பதற்கான அமர்வு நேற்று மாலை தவிசாளர் யோ.ரஜனி தலமையில் ஆரம்பமானது.

இதன்போது தவிசாளரினால் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அது தொடர்பான உரையினை நிகழ்த்தினார்.

அதனை தொடர்ந்து குறித்த வரவு செலவு திட்டத்தினை ஏற்றுக்கொள்வதாக பிரதேசசபை உறுப்பினர் சிதம்பரபிள்ளை இராமகிருஷ்னன் முன் மொழிய அதனை உறுப்பினர் தவராசா தயாழினி வழிமொழிந்தார்.

இதன்போது குறித்த வரவு செலவு திட்டத்திற்கு எதிராக சில உறுப்பினர்கள் தங்களின் எதிர்ப்புகளை பதிவுசெய்தனர்.

கருணா அம்மானின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் சு.விக்கினேஸ்வரன் , சுயேட்சைக்குழு உறுப்பினர் நா.இந்திரநாதன் ஆகியோரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான ம.சுகிகரன்,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர் கோ.ராசு நான்கு பேர் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

17 பேர் சபையில் உறுப்பினராக உள்ளபோதிலும் இன்று 16 பேரே சபை அமர்வுக்கு வருகைதந்திருந்தனர். வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக 12 உறுப்பினர்களும் 4 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.சபை அமர்வானது மேலதிக எட்டு பெருபான்மை வாக்குகளாள் வரவு செலவுத்திட்டம் நிறைவேறியது.

போரதீவுப்பற்று பிரதேசபையின் அமர்வு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையிலும் இன்றைய வரவு செலவு திட்டத்திற்க இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சுகிகரன் எதிராக வாக்களித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய சபை அமர்வின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமும் பார்வையாளராக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments: