தொற்றுறுதியானவர்களில் 36 பேர் தனிமைப்படுத்தட்டவர்கள் என்பதுடன் 312 பேர் திவுலபிட்டிய மற்றும் பேலியகொட கொத்தணிகளுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய மூன்று பேருக்கும் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதன்படிஇ நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 875 ஆக அதிகரித்துள்ளது.
வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 57 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம் நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 89 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதன்படி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 803 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் பி.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் இதுவரையில் கிடைக்கவில்லை என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
No comments: