
பொதுச்செயலாளர் பதவியை துறக்க வேண்டாமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளாரென அக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “நிறைவடைந்த பொதுத்தேர்தலில் மக்கள் எனக்கு ஆணை வழங்காதமையினால் பொதுச்செயலாளர் பதவியை துறக்க அனுமதி வழங்க வேண்டுமென இரா.சம்பந்தனிடம் கேட்டுக்கொண்டேன்.
எனினும் பல தேர்தல் கடமைகள் பொதுச்செயலாளர்களுக்கு இருக்கின்றது. மேலும் இவ்விடயம் தொடர்பாக எங்களுடைய பொதுச்சபைதான் தீர்மானம் எடுக்க வேண்டும். ஆகவே பதவியை துறக்க கூடாது என சம்பந்தன் கூறினார்.
இதனால் இந்த பணியை தொடர்ந்து செய்ய வேண்டிய பொறுப்புடையவனாக இருக்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “நிறைவடைந்த பொதுத்தேர்தலில் மக்கள் எனக்கு ஆணை வழங்காதமையினால் பொதுச்செயலாளர் பதவியை துறக்க அனுமதி வழங்க வேண்டுமென இரா.சம்பந்தனிடம் கேட்டுக்கொண்டேன்.
எனினும் பல தேர்தல் கடமைகள் பொதுச்செயலாளர்களுக்கு இருக்கின்றது. மேலும் இவ்விடயம் தொடர்பாக எங்களுடைய பொதுச்சபைதான் தீர்மானம் எடுக்க வேண்டும். ஆகவே பதவியை துறக்க கூடாது என சம்பந்தன் கூறினார்.
இதனால் இந்த பணியை தொடர்ந்து செய்ய வேண்டிய பொறுப்புடையவனாக இருக்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments: