News Just In

2/20/2020 03:06:00 PM

சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் -இராணுவச் சிப்பாய் கைது


பதினைந்து வயது நிரம்பிய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவரை கந்தகெட்டிய பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

கந்தகெட்டிய பகுதியின் ஹாப்பன்கமுவ என்ற கிராமத்தைச் சேர்ந்த முப்பது வயதுடைய இராணுவ சிப்பாயே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட குறித்த சிறுமி பதுளை அரசினர் வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதையடுத்து அச்சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட வைத்திய அறிக்கையுடன் , கைதுசெய்யப்பட்டுள்ள குறித்த நபரை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யவுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்

No comments: