News Just In

2/18/2020 07:27:00 AM

மட்டக்களப்பு மாவட்டத்தின் மாங்காடு கிராம சேவகர் பிரிவில் மியோவாக்கி முறை காடு வளர்ப்புத் திட்டம் ஆரம்பம்!

இந்த நாட்டில் இயற்கையுடன் கூடிய சூழலை எதிர்கால சமூகத்திற்கு வழங்கும் வகையில் விசேட காடு வளர்ப்பு செயற்றிட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவின் மாங்காடு கிராம சேவகர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இயற்கையில் ஏற்பட்டுவரும் மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் எதிர்கால சமூகத்தினை கொண்டுசெல்லும் வகையில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் மியோவாக்கி என்னும் விஞ்ஞானியினால் முன்னெடுக்கப்பட்ட காடு வளர்ப்பு திட்டத்தினை அடிப்படியாக கொண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் தலைமையில் நேற்று (17.02.2020) நடைபெற்ற இந்த நிகழ்வில் சூழலுக்கு பாதுகாப்பினை அளிக்கும் பல்வேறு மரங்கள் நிகழ்வில் கலந்து கொண்டவர்களினால் நடப்பட்டது.

குறுகிய நிலப்பரப்பிற்குள் அடந்த காட்டினை உருவாக்கும் வகையிலேயே இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

No comments: