News Just In

2/13/2020 07:52:00 AM

சகல பரீட்சைகளுக்கும் ஒன்லைன் மூலம் விண்ணப்பம்!-தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையிலிருந்து ஆரம்பம்!!

பரீட்சைத் திணைக்களத்தின் பாடசாலைகளுக்கான சகல பரீட்சைகளுக்கும் உரிய விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முறை அடுத்த வருடம் முதல் ஒன்லைன் முறையின் கீழ் இடம்பெறவுள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையிலிருந்து இந்த முறைமையை பின்பற்றுவது நோகக்கமாகும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

சகல மாணவர்களுக்குமான தனியான இலக்கங்கள் இதன் கீழ் வழங்கப்படவிருக்கின்றன. மாணவர்களின் பெறுபேறுகள் உட்பட வெளிக்கள செயற்பாடுகள் பற்றிய தகவல்களையும் இதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments: