News Just In

12/22/2019 07:38:00 PM

மட்டு வைத்தியசாலையில் சிசு உயிரிழப்பு! மருத்துவ பிழையா..?


மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் மற்றுமொரு மருத்துவ தவறால் சிசு ஒன்று இறந்துள்ளதாக தெரியவருகிறது. மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தை சேர்ந்த  தம்பதியினரின் பிறந்த குழந்தையே இவ்வாறு இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக வெளியாகும் தகவல்களில்

பிரவசத்திற்காக 20/12/2019 அன்று மாலை பிரவச வலி ஏற்பட்டதை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் அன்று இரவு ஊசி போடப்பட்டது அதன் பின் வலி அதிகம் ஏற்பட்டதை உணர்ந்த அந்த பெண் அங்கு இருந்த தாதியிடம் சென்று கூறியுள்ளார் தனக்கு பிள்ளைய பிறப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் கூறியுள்ளார் ஒரு பிள்ளையின் தாய் என்பதால் அவருக்கு அனுபம் எனவே தாய் தாதியிடம் கூற அந்த தாதி தானும் பெண் என்பதை மறந்தாளோ தெரியவில்லை உனக்கு இப்பதானே ஊசி போட்டிருக்கு நாள் இருக்கு நேரம் இருக்கு பேசாம இரு என்று ஏனோ தானென்று அலட்சியமாக கூறியுள்ளார்.

அந்த சமயம் அனைவரும் உறக்கத்தில் இருந்ததாகவும் அந்த பெண் கூறினார் பின்பு வலி மீண்டும் அதிகரிக்க அந்த பெண்ணால் எழும்ப கூட முடியாத நிலையில் பக்கத்தில் இருந்த மற்றுமெரு பிரசவத்துக்காக வந்திருந்த பெண் தாதியிடம் சென்று கூற அதன் பின்புதான் பிரசவ அறைக்கு கொண்டு செல்லபட்டிருக்கிறார் அங்கும் சில மணித்தியாலங்கள் போராட்டத்தின் மத்தியில் நள்ளிரவு 1:35 am ஆண் குழந்தை பிறந்துள்ளது அக்குழந்தை அழுததாகவும் சிறுநீர் கழித்ததாகவும் அத் தாய் கூறினார் பின் அக்குழந்தைக்கு சுவாசிப்பதில் கடினமாக உள்ளதாகவும் 1மணித்தியலம் கண்ணாடி பெட்டியில் வைத்தால் சரியாகிவிடும் என்று கூறிவிட்டு குழந்தையை எடுத்து சென்றுள்ளனர்...

பிள்ளையை எதிர் பார்த்து கொண்டிருந்த தாய் 2மணித்தியாலங்கள் கழித்தும் பிள்ளையை காட்டவும் இல்லை பிள்ளை இறந்து விட்டதாக கூறி இருக்கிறார்கள் பிள்ளையின் நிறை 2kg 35g இறந்ததுக்கான காரணம் வினவிய போது பல தரபட்ட காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாக தெரியவருக்கிறது.

குறித்த தகவல்கள் சமூக வலைத் தளங்களில் தற்போது பரவி வருவதுடன் இது தொடர்பான உண்மைத் தன்மைகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் பிள்ளையின் பிறப்பில் அந்தப் பிள்ளைக்கு ஏற்கனவே ஏற்பட்ட நுரையீரல் அழுத்தம் இன்மைகாரணமாக  சிசு இறந்துள்ளது.

இதனை அடுத்து குழந்தையின் பெற்றோர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து குறித்த பிள்ளையின் உண்மை நிலை தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டதாகவும்.

சம்பவம் தொடர்பாக கலந்துரையாடிய பின் தற்போது எமது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை சீர் கேடு  காரணமாக இறந்த பிள்ளையை வைத்தியசாலை செலவில் அடக்கம் செய்வதற்கு பெற்றோரும் உறவினர்களும்  வைத்தியசாலை வட்டாரத்துக்கு தெரிவித்துள்ளதாகவும்  வைத்தியசாலை வட்டாரத்தின் வாயிலாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



No comments: