
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிய வெள்ளப் பாதிப்பினால் இதுவரை 42 வீடுகள் பகுதியளவிலும் ஒரு வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத் செவ்வாய்க்கிழமை 10.12.2019 தெரிவித்தார்
சேத நிலைமைகளை மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் இடர் முகாமைத்துவ அதிகாரிகள் சகிதம் நேரில் சென்று பார்வையிட்டார்.
வெள்ள இடரினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் திருத்தியமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் எ.எஸ்.எம் சியாத் தெரிவித்தார்.
மேலும் அவ்வீடுகளை புனரமைப்பதற்காக மதீப்பீட்டு அறிக்கை கிடைத்ததும் அதற்கான நிதியினை விடுவிப்பதற்கு தேசிய இடர் முகாமைத்துவ நிலையம் ஆயுத்தமாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
No comments: