வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு அந்தமான் கடற்பிராந்தியம் மற்றும் தென்கிழக்கு கடற்பிராந்தியங்களில் நிலவும் தாழமுக்கம் வலுவடைந்து எதிர்வரும் 6 மணித்தியாலங்களில் வடமேல் திசையை நோக்கி செல்லக்கூடும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நிலை எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் பெரும்பாலும் சூறாவளியாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக இந்த கடற்பிராந்தியங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த கடற்பிரதேசத்தில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுவதுடன் கடலும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். மீனவர்கள் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
11/05/2019 08:30:00 PM
தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையும் சாத்தியம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: