நாடளாவிய ரீதியிலுள்ள 19 கல்வியியற் கல்லூரிகளுக்கு இரு தொகுதிகளைச் சேர்ந்த 8000 மாணவர்கள் ஒரே தடவையில் உள்வாங்கப்பட்டுள்ளனர் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை காலமும் ஒவ்வொரு வருடமும் 3500 தொடக்கம் 4000 மாணவர்களே தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்பட்டனர். எனினும் இம்முறை 2016, 2017 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 8000 மாணவர்கள் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ஒக்டோபர் 03 ஆம் திகதியிலிருந்து தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்கள் உள்வாங்கப்பட்டு வருகின்றனர். இதன்படி
ஒக்டோபர் 03 ஆம் திகதியிலிருந்து தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்கள் உள்வாங்கப்பட்டு வருகின்றனர். இதன்படி
ஒக்டோபர் 03 - நிட்டம்புவ சாரிபுத்த, மட்டக்களப்பு, அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர்.
ஒக்டோபர் 15 - மகாவலி, ருவன்புர, பேராதெனிய ஆகிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர்.
ஒக்டோபர் 16 - வவுனியா, யாழ்ப்பாணம், தர்காநகர், பத்தனை ஸ்ரீபாத, மஹரகம, ஊவா ஆகிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர்.
ஒக்டோபர் 24 - நில்வள, வடமேல் கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.
ஒக்டோபர் 28 - தம்பதெனிய சாரிபுத்ர, ருஹூணு, ஹாபிட்டிகம, பஸ்துண்ரட, புலதிசிபுர கல்லூரிகளுக்கு மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.
இவர்களுக்கான தங்குமிட வசதிகள், உணவு மற்றும் குடிநீர் என்பவற்றுக்காக 430 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments: