News Just In

10/17/2019 02:00:00 PM

மதீனாவிற்கு புனித யாத்திரை சென்ற 35 பேர் விபத்தில் பலி

சவூதி அரேபியாவின் மதீனா பகுதியில் புதன்கிழமை (16.10.2019) நிகழ்ந்த விபத்தில் புனித யாத்திரை சென்ற 35 யாத்திரீகர்கள் கொல்லப்பட்டதாக சவுதியின் அதிகாரபூர்வ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அல்-அகல் கிராமத்திற்கு அருகே மதீனாவிலிருந்து 170km தூரத்தில் உள்ள ஹிஜ்ரா சாலையில் புதன்கிழமை இரவு 7 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. 39 பயணிகளை ஏற்றி சென்ற பயணிகள் வாகனம் கனரக வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் 35 யாத்திரீகர்கள் தீயில் உடல் கருகி உயிரிழந்துள்ளார்கள். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சைகளுக்காக அல்-ஹம்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சவுதி செம்பிறை சங்கம் மற்றும் ஏனைய அவசர சேவைகள் சம்பவ இடத்தை சென்றடைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. விபத்து தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேபோல்
ஏப்ரல் 2018 இல் மக்காவுக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து எரிபொருள் கொண்டு சென்ற வண்டியுடன் மோதியதில் நான்கு யாத்திரீகர்கள் கொல்லப்பட்டு 12 பேர் காயமடைந்தனர். 

ஜனவரி 2017 இல் மக்காவுக்கு யாத்திரை மேற்கொண்டு மதீனா செல்லும் வழியில் இரண்டு மாத குழந்தை உட்பட ஆறு பேர் விபத்துக்குள்ளாகி மரணித்தனர்.

No comments: