News Just In

10/18/2019 10:46:00 AM

அவுஸ்திரேலிய இருபதுக்கு 20 கிரிக்கட் தொடருக்கான இலங்கையணி அறிவிக்கப்பட்டுள்ளது

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இம்மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கட் தொடருக்கான 16 பேர்கொண்ட குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை வியாழக்கிழமை (17) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை 3-0 என வெற்றிகொண்ட இலங்கை அணி ஒக்டோபர் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடருக்காக அங்கு பயணமாகவுள்ளது.

இந் நிலையில், அவுஸ்திரேலிய தொடருக்காக 16 பேர்கொண்ட இலங்கை குழாத்தின் வீரர்கள் விபரம் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் சென்ற இலங்கை இருபதுக்கு 20 குழாத்திலிருந்து நான்கு மாற்றங்கள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. விக்கெட் காப்பாளர்களான சதீர சமரவிக்ரம, மினோத் பானுக, சகலதுறை வீரர் லஹிரு மதுசங்க மற்றும் துடுப்பாட்ட வீரர் அஞ்செலோ பெரேரா ஆகியோர் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இருபதுக்கு 20 அணியின் தலைவராக மீண்டும் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் அணிக்கு தலைமை தாங்கிய தசுன் ஷான அணியில் இடம்பெற்றிருக்கிறார். 

லசித் மாலிங்கவுடன், குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல ஆகிய நான்கு வீரர்கள் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

No comments: