![](https://lankasee.com/wp-content/uploads/2024/05/Background-2024-05-12T145903.262-750x375.png)
மட்டக்களப்பு (Batticaloa) பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதியில் வீதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் 58 துப்பாக்கி ரவைகள் மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய நேற்று (11) துப்பாக்கி ரவைகள் மீட்க்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
சம்பவதினமான நேற்று இருதயபுரம் சமுர்த்தி வங்கி கட்டிடத்துக்கு அருகாமையில் வீதி ஓரத்தில் சொப்பின் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் குறித்த ரவைகள் காணப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதற்கமைய சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக குற்றப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய நேற்று (11) துப்பாக்கி ரவைகள் மீட்க்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
சம்பவதினமான நேற்று இருதயபுரம் சமுர்த்தி வங்கி கட்டிடத்துக்கு அருகாமையில் வீதி ஓரத்தில் சொப்பின் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் குறித்த ரவைகள் காணப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதற்கமைய சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக குற்றப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
![](https://lankasee.com/wp-content/uploads/2024/05/24-664020c5c02d9.jpg)
No comments: