ஜேர்மன் நாட்டின் பிரதி தூதுவர் மட்டக்களப்புக்கு வருகை
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
ஜேர்மன் நாட்டிற்கான பிரதி தூதுவர் சாரா ஹசுபாத்;தும் அவரது குழுவினரும் செவ்வாயன்று மட்டக்களப்புக்கு வருகை தந்து அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
முன்னதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதனையும் மாநகர சபை அதிகாரிகளையும் மாநகரசபையில் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பில், மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் வழங்குவதற்கு ஜேர்மன் தரப்பு தயாராக இருப்பதாக பிரதி தூதுவர் தெரிவித்தார்.
மேலும், 2004ஆம் ஆண்டு சுனாமி கடற்பேரலை பேரழிவின் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு ஜேர்மன் அரசும், அந்நாட்டு மக்களும் வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்காக மாநகரசபை முதல்வர் நன்றியைத் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் மாநகரசபை பிரதி முதல்வர் வைரமுத்து தினேஸ் குமார், ஜேர்மன் தூதரக அதிகாரி டாரினி டலுவத்த, பிரதேச சபைகளின் தவிசாளர்கள், மாநகரசபை ஆணையாளர், பொறியாலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments: