
பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ளப் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் அவர் தற்போதைய அரசியல் யதார்த்தங்களைத் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக அந்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் பீட்டர் கைல் தெரிவித்துள்ளார்.
ஆளும் தொழிற்கட்சியைச் சேர்ந்த ஸ்டார்மரின் செல்வாக்கு சமீபகாலமாகப் பெரும் சரிவைச் சந்தித்துள்ள சூழலில் அவரது அரசியல் எதிரியான ஆண்டி பர்ன்ஹாம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குத் தேர்வாகியுள்ளார்.
இது பிரதமர் பதவிக்கு பர்ன்ஹாம் அதிகாரப்பூர்வமாகச் சவால் விடுப்பதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளதால் ஸ்டார்மரின் பிரதமர் பதவிக்கு மிகக் கடுமையான அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
திங்கட்கிழமை (22) அதிகாலையிலேயே கீர் ஸ்டார்மர் தனது பதவி விலகலை அறிவிக்கக்கூடும் என்று பிரித்தானியாவின் தி அப்சர்வர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மனைவியுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கட்சியின் மூத்த தலைவர்கள் அவரது இறுதி முடிவை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் டவுனிங் ஸ்ட்ரீட் (பிரதமர் அலுவலகம்) தரப்பு ஸ்டார்மர் தொடர்ந்து அரசுப் பணிகளில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்து இந்த ஊகங்களை மறுத்துள்ளது.
No comments: