News Just In

6/30/2026 05:58:00 PM

நீதிமன்ற வளாகத்தில் அநுரவைப் பற்றி பிள்ளையான் வெளியிட்ட பகிரங்க அறிவிப்பு!

நீதிமன்ற வளாகத்தில் அநுரவைப் பற்றி பிள்ளையான் வெளியிட்ட பகிரங்க அறிவிப்பு



தன் மீது முன்வைக்கப்படும் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள் என்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான், மீண்டும் சிறைச்சாலை பேருந்தில் அழைத்துச் செல்லப்படும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 14 நாட்களுக்கு முன்னர் பிள்ளையானுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 4 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

விசாரணைகளை அடுத்து, பிள்ளையானை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், நீதிமன்றத்தில் இருந்து அழைத்துச் செல்லப்படும் போது, அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிள்ளையானிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு, “என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானவை, அநுரவின் வாயைப் போல அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள்” என்று பிள்ளையான் பகிரங்கமாக அறிவித்துவிட்டுச் சென்றுள்ளார்.

No comments: