கடும் காற்றுடன் பலத்த மழை; தூக்கி வீசப்பட்ட கூரைகள்! வீடுகள், வர்த்தக நிலையங்கள் சேதம்

வவுனியா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட கடும் காற்றுடன் கூடிய பலத்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
நேற்று மதியம் திடீரென வீசிய கடும் காற்றினால் வவுனியா நகர், அதனைச் சூழவுள்ள கிராமப்புறங்களில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களின் கூரைகள் பகுதியளவில் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
வவுனியா நகரின் வர்த்தக நிலையங்கள் பலவற்றின் தகரக் கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டதில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
திடீர் அனர்த்தம் காரணமாக பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மதிய நேரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டதால், நகருக்கு வருகை தந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.
No comments: