News Just In

4/04/2026 01:24:00 PM

சாய்ந்தமருதில் உணவகங்கள் மற்றும் வீதியோர விற்பனை நிலையங்கள் திடீர் சுகாதார சோதனை

சாய்ந்தமருதில் உணவகங்கள் மற்றும் வீதியோர விற்பனை நிலையங்கள் திடீர் சுகாதார சோதனை

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் மற்றும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்கள் மீது இன்று பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே. மதன் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்த சோதனைகளின் போது, நுகர்விற்கு தகுதியற்ற உணவுப் பொருட்கள் மற்றும் கெடுபிடியான மரக்கறிகள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, அவை உடனடியாக அப்பகுதிகளிலேயே அகற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

மேலும், சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களுக்கு சுகாதார விதிமுறைகள், உணவு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சுத்தமான சூழலை பராமரிப்பது குறித்து விரிவான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது முக்கியக் கடமையாக இருப்பதால், இத்தகைய திடீர் சோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments: