ஈரானிய வணிகக் கப்பலான டூஸ்காவை அமெரிக்கப் படைகள் கைப்பற்றியதை ஈரானின் ஹஸ்ரத் கதம் அல்-அன்பியா இராணுவத் தலைமையகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
ஓமன் கடல் பகுதியில் அமைதியாகச் சென்ற கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திச் சட்டவிரோதமாகக் கைப்பற்றியதை ஆயுதமேந்திய கடல் கொள்ளை என ஈரான் சாடியுள்ளது.
முன்னதாக அமெரிக்கப் படைகளை விரட்டியடித்ததாகக் கூறி வந்த ஈரானிய ஊடகங்கள், தற்போது கப்பல் பறிபோனதை ஒப்புக்கொண்டுள்ளன.
இந்த நடவடிக்கை சர்வதேச கடல்சார் விதிகளையும் போர்நிறுத்த உடன்படிக்கையையும் அப்பட்டமாக மீறும் செயல் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இச்சம்பவத்திற்கு விரைவில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதால் ஓமன் வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதிகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஓமன் கடல் பகுதியில் அமைதியாகச் சென்ற கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திச் சட்டவிரோதமாகக் கைப்பற்றியதை ஆயுதமேந்திய கடல் கொள்ளை என ஈரான் சாடியுள்ளது.
முன்னதாக அமெரிக்கப் படைகளை விரட்டியடித்ததாகக் கூறி வந்த ஈரானிய ஊடகங்கள், தற்போது கப்பல் பறிபோனதை ஒப்புக்கொண்டுள்ளன.
இந்த நடவடிக்கை சர்வதேச கடல்சார் விதிகளையும் போர்நிறுத்த உடன்படிக்கையையும் அப்பட்டமாக மீறும் செயல் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இச்சம்பவத்திற்கு விரைவில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதால் ஓமன் வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதிகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: