
களுத்துறை, நாகொட போதனா மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறைச்சாலை கைதி ஒருவர் குறிவைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்..
மருத்துவமனையின் 14வது அறையில் சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை கைதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நேரத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் அங்கு இருந்ததாக தெரியவந்துள்ளது.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: