வவுனியா பொது வைத்தியசாலையில் காவல் மையத்தில் பணிப்புரிம் பொலிஸ் அதிகாரியின் செயல் !
வவுனியா பொது வைத்தியசாலையில் காவல் மையத்தில் பணிப்புரிந்து கொண்டிருந்த பொலிஸ் சர்ஜென்ட் 46674 திலகரதன என்ற அதிகாரி அவர்கள் இன்று (24/11/2025) வைத்தியசாலையை சுற்றிப் பார்வையில் ஈடுபட்டிருந்த போது தரையில் விழுந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
பின்னர் அந்த அதிகாரி இது குறித்து செவிலியர் குழுவினருக்கும் அறிவித்ததுடன், அந்த தங்கச் சங்கிலியை காவல் மையத்தில் பாதுகாத்து வைத்திருந்தார்கள்.
அதற்குப் பிறகு, ஒரு பல்கலைக்கழக மாணவி தன் தாயாருடன் கண்ணீர் மல்க தன்னால் இழந்த தங்கச் சங்கிலியைத் தேடி வந்தபோது, மருத்துவமனை காவல் மைய அதிகாரிகள் அடையாளம் உறுதிப்படுத்திய பின்னர் அந்த சங்கிலியை மீண்டும் அவருக்குக் கையளித்தனர்.
மாணவியின் கண்களில் மகிழ்ச்சிக் கண்ணீர் வழிந்தபோது அந்த தங்கச் சங்கிலியை வழங்கிய தருணமே இது
No comments: