News Just In

11/14/2025 07:38:00 AM

ஐயப்ப யாத்திரை புனித யாத்திரையாக பிரகடனம்; வெளியானது வர்த்தமானி - இலங்கையின் ஐம்பது வருட கால கனவு நனவானது


ஐயப்ப யாத்திரை புனித யாத்திரையாக பிரகடனம்; வெளியானது வர்த்தமானி
- இலங்கையின் ஐம்பது வருட கால கனவு நனவானது




ஐயப்ப பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தும் கோரிக்கை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் வேண்டுகோளுக்கிணங்க, புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி ஆலோசனை பிரகாரம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பரிந்துரைக்கமைய அமைச்சரவை அனுமதி பெறப்பட்டதுடன் அதற்கான வர்த்தமானி அறிவித்தல்  (13) அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இது உலக வாழ் இந்துக்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியோடு ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக பிரகனப்படுத்திய ஒரே நாடு என்று பெருமையினையும் இலங்கை பெற்றுள்ளது.


No comments: