
மூதூர் -வீரமாநகர் ,சந்தோசபுரம் கிராமங்களைச் சேர்ந்த 60 மாவீரர் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கலும் ,நினைவஞ்சலி நிகழ்வும் மூதூரில் இடம்பெற்றது.
இதன் போது யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

சம்பூர் ஆலங்குளம் மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் குமார் ஜெயக்குமரன் அவர்களினால் இவ் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் முதூர் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பிரகலதன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments: