News Just In

9/29/2025 04:07:00 PM

கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: அவசர சிகிச்சைப் பிரிவில் இருவர்

கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: அவசர சிகிச்சைப் பிரிவில் இருவர்



கிளிநொச்சியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம்(29.09.2025) கிளிநொச்சி தட்டுவான் கொட்டியில் காலை 11:30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பாழடைந்த வீடொன்றில் வெடிக்காத நிலையில் இருந்த குண்டை கழற்ற முயன்ற போது திடீரென ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இதில் கச்சை பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கொடிகாமம் சேர்ந்த ஒருவரும் 20 மற்றும் 50வயதுடையவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: