இவ் வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 49 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் மொத்தம் 3,937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில், 72 சோதனைகள் நடத்தப்பட்டன, அவற்றில் 39 வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களில், அmதிகளவாக 17 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
நீதி அமைச்சு, சுகாதார அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு (SLTB) மற்றும் மாவட்ட செயலகங்கள் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களிலிருந்தும் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டது.
மேலும், இந்தக் காலகட்டத்தில், இலஞ்சம் பெற்றதற்காக 27 நபர்களுக்கு நீதிமன்றங்களால் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: