ஈரான் (Iran) தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை மற்றும் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
தேவைப்பட்டால் தாக்குதல்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இந்த தாக்குதலில், ஈரான் புரட்சிகர காவல்படை தலைவர் ஹொசைன் சலாமி (Hossein Salam) இஸ்ரேலிய (Israel) தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, நடான்ஸ் அணுசக்தி நிலையத்தில் வெடிப்புகள் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய தாக்குதலில் மூத்த அணு விஞ்ஞானிகள் 2 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்களில் அணுசக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் ஃபெரேடூன் அப்பாசியும் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தனது அணுசக்தி திட்டத்திற்கு எதிராக இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ''கடுமையான பதிலடி'' கொடுக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக ஈரானிய பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கொள்காட்டி சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
No comments: