பொத்துவில் கனகர் கிராமத்தில் 1990ம் ஆண்டில் விரட்டிஅடிக்கப்பட்ட 228குடும்பங்களை சேர்ந்த தமிழ்மக்கள் இன்றுவரை தமது கிராமத்தில் மீள்குடியேற்றப்படாமல் விடப்பட்டு உள்ளனர்.
அண்மையில் 73 குடும்பங்கள் மீள்குடியமர அனுமதிக்கப்பட்டபோதும் அந்த மக்கள் அங்கு நிரந்தரமாக இருக்க அரசு எவ்விதவசதிகளையும் வழங்காதது பெரும்கவலைக்குரிய விடயமே!காட்டு யானைகளின் அச்சுறுத்தல் ,குடிநீர் பிரச்சணைஎன்பவற்றுக்கு மத்தியில் பத்திற்கு குறைவான குடும்பங்களே தற்போதுஅங்கு நிரந்தரமாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் குடிநீர்பிரச்சனையைஓரளவு நிவர்த்தி செய்யும் பொருட்டு
யாழ் நல்லூர் உடையார் கட்டைசேர்ந்த இராசையா குகதாசன் குடும்பத்தினரால் 727000/-ரூபாய்செலவில் அமைக்கப்பட்ட குடிநீர்
கிணறு பொதுமக்கள் பாவனைக்கு இன்று வழங்கப்பட்டது
No comments: