கல்முனை வலய அதிபர்களுடான சந்திப்பு கல்முனை கல்வி வலய பணிப்பாளர் எம்.எஸ்.சஹதூல் நஜீம் அவர்களின் தலைமையில் இன்று (19) கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலை மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் க.குணநாதன் அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கே.குணநாதன் அவர்கள், மாணவர்களின் கல்வி மேம்பாடு, பாடசாலை நிர்வாகம், மாணவர்கள் ஒழுக்கம் என்பவற்றிலும், ஆசிரியர்களிடமிருந்து பாடசாலை உச்ச பயனை பெறுவதிலும் அதிபர்களின் வகிபாகம் தொடர்பில் இதன்போது வலியுறுத்தினார். மேலும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சரியான வழிகாட்டல்களை அதிபர்கள் செய்ய வேண்டியது மிக அவசியம் என்று வலியுறுத்தினார்.
மாணவர்களுக்கு கிடைக்கும் பயனை உரிய நேரத்தில் பெற்றுக் கொடுப்பதன் அவசியத்தை குறிப்பிட்டு அரசு அளிக்கும் நிதி உதவியை மாணவர்களுக்கு அதிபர்கள் பெற்றுக் கொடுப்பதில் பின் நிற்க கூடாது என வலயக் கல்வி பணிப்பாளர் தெரிவித்தார்.
அத்துடன் இறுதியாக வெளியான க.பொ.த உயர்தரத்தில் மாவட்ட மட்டத்தில் மருத்துவ துறையில் முதலிடம் பெற்ற மாணவனையும், பொறியியல் துறையில் முதலிடம் பெற்ற மாணவனுக்கும் நினைச் சின்னம் வழங்கப்பட்டது. மேலும் பௌதீக வளம் குறைந்த மூன்று பாடசாலைகளுக்கு மடிக் கணினி வழங்கப்பட்டதுடன் இருபது மாணவர்களுக்கு அவர்களின் கல்விச் செலவுக்காக காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிமனை பிரதி கல்வி பணிப்பாளர் கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், அதிகாரிகள், அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments: