
மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள கிராமம் ஒன்றில் 68 வயது வயோதிபர் ஒருவரால் பல மாதங்களாக பதின்மவயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ள சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
கடந்த ஏழு மாதத்திற்கு மேலாக பதின்நான்கு வயது சிறுமியுடன் தகாத உறவில் இருந்து சிறுமியை கர்ப்பம் ஆக்கிய சம்பவம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேக நபரை எதிர்வரும் 28ம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments: