மாபெரும் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்!
அபு அலா
கிழக்கு மாகாண சுதேச வைத்திய திணைக்களத்தின் அனுசரணையுடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டலின் கீழ், நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் இன்று (24) சனிக்கிழமை இடம்பெற்றது.
நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாயலின் முன்பாக இடம்பெற்ற இந்த வைத்திய முகாம் "ஆயுர்வேத, யூனானி வைத்திய வாழ்க்கை முறையூடாக நீரிழிவு நோயற்ற நாட்டை கட்டி எழுப்புவோம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.
இதில் மிக அதிகளவான நோயாளர்கள் வருகை தந்து வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொண்டதுடன் அவர்களின் இரத்தம் மற்றும் குருதி அமுக்க பரிசோதனையையும் இலவசமாகப் பெற்றுக்கொண்டதுடன்
உடல்வலி, உடற்பருமன், தோல் நோய்கள், நீரிழிவு, இரத்த அழுத்தம் பெண்கள் தொடர்பான நோய்கள், பக்கவாதம் போன்ற பல்வேறுபட்ட நோய்களுக்கான வைத்திய ஆலோசனை மற்றும் மருந்துகளையும் இலவசமாக பெற்றுக்கொண்டனர்.
இந்த மாபெரும் இலவச மருத்துவ முகாமில் கிழக்கு மாகாண சுதேச வைத்திய திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல், நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் யூ.எல்.நிஹாயா, நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட வைத்திய குழுவினர் மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் பங்கேற்றமையும், அங்கு வருகை தந்த அனைவருக்கும் மூலிகை இலைக் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது
5/25/2025 05:48:00 AM
மாபெரும் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: