News Just In

4/09/2025 09:12:00 AM

தேசபந்துவை பதவி நீக்குவதற்கான விசாரணைக் குழு - பிரேரணை நிறைவேற்றம்!


தேசபந்துவை பதவி நீக்குவதற்கான விசாரணைக் குழு - பிரேரணை நிறைவேற்றம்




முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்குவது தொடர்பாக விசாரணை குழு ஒன்றை நியமிப்பது தொடர்பான பிரேரணை 157 வாக்குகளால் இன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தப் பிரேரணையை தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர சமர்ப்பித்திருந்தார்.

இதனடிப்படையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரேணைக்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக எவ்வித வாக்குகளும் பதிவாகவில்லை என்பது சிறம்பம்சமாக காணப்படுகின்றது

தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் காரணமாக அவரை பதவியிலிருந்து நீக்குவதற்காக ஒரு விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் தனது கருத்துக்களை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர், இந்த பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.

No comments: