(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
எமது நாட்டின் அரசியல் வரலாற்றைப் பின்நோக்கிப் பார்க்கும் போது இனவாதத்தினை உருவாக்கி ஆட்சிக்கு வந்தவர்கள் எல்லோரும் அழிந்து போன வரலாற்றை நாம் கண்டுள்ளோம். அதனால் நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும் நோக்காக்கொண்டு செயற்படும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமேதாசாவின் வெற்றிக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஈடுபட வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர்களுக்கான விசேட கூட்டம் ஏறாவூரில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரண்டு வருடங்கள் தனது பதவிக்காலம் இருக்கத்தக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீரென ஜனாதிபதித் தேர்தலை நடாத்தினார். அப்போதைய காலகட்டத்தில் நாம் தேர்தலுக்குச் சென்றால் தோல்வியடைவோம் என ஆலோசனைகள் வழங்கிய போதும் நான் தேர்தலை நடத்தியே தீருவேன் எனக்கூறி ஜனாதிபதித்தேர்தலை நடத்தினார். அன்று என்ன நடந்தது?, அவருடைய கட்சியின் செயலாளராகப் பதவி வகித்த மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
2020ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் இனவாதத்தினை உருவாக்கி முஸ்லிம் சமூகத்தை பெரும்பான்மை சமூகத்திடம் வெறுப்பாகக்காட்டி 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தனது பதவிக்காலம் இரண்டரை வருடங்கள் இருக்கத்தக்கதாக தரையில் சில காலமும் நீரில் சில காலமும் ஒழிந்து வாழ்ந்து நாட்டை விட்டுத் தப்பியோடினார்.
அதன் பிறகு ரணில் விக்கிரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாகப் பதவி வகித்தார். நல்லாட்சி அரசாங்க காலத்தில் இனவாதிகளால் திட்டமிடப்பட்டு உடைக்கப்பட்ட அம்பாறை பள்ளிவாசலை பார்வையிட வருவதாக அன்று பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்து இனவாதிகளால் உடைக்கப்பட்ட அம்பாரை மாவட்ட பள்ளிவாசலினை பார்வையிடாமல் ஒலுவில் விடுதியில் தங்கி விட்டுச்சென்ற வரலாற்றையும் நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் மறந்து விடக்கூடாது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள எமது நாட்டுக்கான தலைவரைத்தெரிவு செய்யும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. மறைந்த பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் ஜனாதிபதித்தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் போது, முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்தி வாக்குகளை வழங்கி ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கும் அரசாங்கத்தை அமைப்பதற்கும் வித்திட்டார். இதனூடாக எமது சமூகம் தொடர்பான விடயங்களும் நிறைவேற்றப்பட்டன.
நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரமேதாசாவை ஆதரிப்பது தொடர்பாக கட்சியின் உச்சபீடம் நீண்ட நேரம் ஆலோசித்து வாதப்பிரதிவாதங்கள் நடத்தி நமது சமூகம் தொடர்பான விடயங்களை முன்னிறுத்தி சஜித் பிரமேதாசாவிற்கு ஆதரவு வழங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டது.
எனவே, சஜித் பிரமேதாசாவிற்கு ஆதரவு வழங்குவது, நாட்டில் வாழும் பெரும்பான்மையான இன மக்களுக்கு மத்தியில் பாரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் ஜனாதிபதித்தேர்தலில் சஜித் பிரமேதாசாவை வெற்றியடையச் செய்வதில் நாமனைவரும் அர்ப்பணிப்புடனான தியாகத்துடன் செயற்பட வேண்டும் எனக்கூறினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர்களுக்கான விசேட கூட்டம் ஏறாவூரில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரண்டு வருடங்கள் தனது பதவிக்காலம் இருக்கத்தக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீரென ஜனாதிபதித் தேர்தலை நடாத்தினார். அப்போதைய காலகட்டத்தில் நாம் தேர்தலுக்குச் சென்றால் தோல்வியடைவோம் என ஆலோசனைகள் வழங்கிய போதும் நான் தேர்தலை நடத்தியே தீருவேன் எனக்கூறி ஜனாதிபதித்தேர்தலை நடத்தினார். அன்று என்ன நடந்தது?, அவருடைய கட்சியின் செயலாளராகப் பதவி வகித்த மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
2020ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் இனவாதத்தினை உருவாக்கி முஸ்லிம் சமூகத்தை பெரும்பான்மை சமூகத்திடம் வெறுப்பாகக்காட்டி 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தனது பதவிக்காலம் இரண்டரை வருடங்கள் இருக்கத்தக்கதாக தரையில் சில காலமும் நீரில் சில காலமும் ஒழிந்து வாழ்ந்து நாட்டை விட்டுத் தப்பியோடினார்.
அதன் பிறகு ரணில் விக்கிரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாகப் பதவி வகித்தார். நல்லாட்சி அரசாங்க காலத்தில் இனவாதிகளால் திட்டமிடப்பட்டு உடைக்கப்பட்ட அம்பாறை பள்ளிவாசலை பார்வையிட வருவதாக அன்று பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்து இனவாதிகளால் உடைக்கப்பட்ட அம்பாரை மாவட்ட பள்ளிவாசலினை பார்வையிடாமல் ஒலுவில் விடுதியில் தங்கி விட்டுச்சென்ற வரலாற்றையும் நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் மறந்து விடக்கூடாது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள எமது நாட்டுக்கான தலைவரைத்தெரிவு செய்யும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. மறைந்த பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் ஜனாதிபதித்தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் போது, முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்தி வாக்குகளை வழங்கி ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கும் அரசாங்கத்தை அமைப்பதற்கும் வித்திட்டார். இதனூடாக எமது சமூகம் தொடர்பான விடயங்களும் நிறைவேற்றப்பட்டன.
நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரமேதாசாவை ஆதரிப்பது தொடர்பாக கட்சியின் உச்சபீடம் நீண்ட நேரம் ஆலோசித்து வாதப்பிரதிவாதங்கள் நடத்தி நமது சமூகம் தொடர்பான விடயங்களை முன்னிறுத்தி சஜித் பிரமேதாசாவிற்கு ஆதரவு வழங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டது.
எனவே, சஜித் பிரமேதாசாவிற்கு ஆதரவு வழங்குவது, நாட்டில் வாழும் பெரும்பான்மையான இன மக்களுக்கு மத்தியில் பாரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் ஜனாதிபதித்தேர்தலில் சஜித் பிரமேதாசாவை வெற்றியடையச் செய்வதில் நாமனைவரும் அர்ப்பணிப்புடனான தியாகத்துடன் செயற்பட வேண்டும் எனக்கூறினார்.
No comments: