News Just In

9/05/2023 03:54:00 PM

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகள் சாதனை!




(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகள் அதிகளவானோர் பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளனர்.

கடந்த கா.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 100 க்கு அதிகமான மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் நேற்று 04.09.2023 வெளியான நிலையில் வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகள் மாவட்ட ரீதியில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் ஆறாவது இடத்தையும் வணிகப்பிரிவில் ஐந்து மற்றும் ஆறாவது இடத்தையும் கணிதப்பிரிவில் பத்தாவது இடத்தையும், கலைப்பிரிவில் நான்காவது ஐந்தாவது மற்றும் ஒன்பதாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

பாடசாலை நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறந்த செயல் திட்டங்களில் இம்முறை வின்சன்ட் மகளிர் மாணவிகள் வர்த்தகப் பிரிவில் 100 வீதம் சித்தி பெற்றுள்ளதுடன் அதிகளவான மாணவிகள் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எனவே இவ்வாறான மகத்தான சாதனை புரிந்த மாணவ செல்வங்களை வாழ்த்துவதோடு இதற்கு முன் நின்று உழைத்த கல்விப்பணிப்பாளர், அவருடன் இணைந்த குழாமினர், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கல்வியியலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

No comments: