கொழும்பில் தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் டுவிட்டர் பதிவொன்றினை வெளியிட்டுள்ளார்.
குறித்த டுவிட்டர் பதிவில், கொழும்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் கொலன்னாவ துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பில் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொழும்பு 4, 5, 7, 8, 10, 12 மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
No comments: