News Just In

4/08/2023 03:43:00 PM

குளவி கூடொன்று கலைந்து குளவிகள் கொட்டியதில் 11 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்!

பசறை கோணக்கலை தோட்ட கீழ் பிரிவில் பெண் தொழிலாளர்கள் 10 பேர் உட்பட 11 பேர் பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (08) முற்பகல் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த வேளையில் குளவி கூடொன்று கலைந்து தொழிலாளர்களை கொட்டியுள்ளது.

இதன்போது குளவிக்கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்களை காப்பாற்ற சென்ற இளைஞர் ஒருவரும் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இவர்கள் பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments: