News Just In

3/31/2023 12:08:00 PM

மாணவர்களுக்கு முதலாம் தரத்தில் இருந்து ஆங்கிலம் கற்பிப்பதற்காக 13 ஆயிரத்து 800 ஆசிரியர்களுக்கு பயிற்சி!



பாடசாலை மாணவர்களுக்கு முதலாம் தரத்தில் இருந்து ஆங்கிலம் கற்பிப்பதற்காக 13 ஆயிரத்து 800 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

நுகேகொட சமுத்திராதேவி மகளிர் ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒன்பது மாகாணங்களையும் மையமாக வைத்து இந்த செயற்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: