News Just In

12/21/2022 12:18:00 PM

நீர் குழியில் விழுந்து நபரொருவர் மரணம்; கும்புறுமூலையில் சம்பவம்




(எச்.எம்.எம்.பர்ஸான்)

நீர் குழி ஒன்றில் விழுந்து நபரொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுமூலை பகுதியில் வைத்தே இச் சம்பவம் இன்று புதன்கிழமை காலை (21) இடம்பெற்றுள்ளது.

தோட்டம் ஒன்றில் வெட்டப்பட்டிருந்த நீர் குழி ஒன்றில் தவறி விழுந்தது அந் நபர் மரணமடைந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு மரணமடைந்த நபர் கும்புறுமூலை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய உதிஸ்கரன் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மரணமடைந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



No comments: