News Just In

12/26/2022 08:56:00 AM

65 அடி உயர பாலத்திலிருந்து ஆற்றுக்குள் விழுந்த பேருந்து!

ஸ்பெயினில் 65 அடி உயர பாலத்திலிருந்து ஆற்றுக்குள் பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரவு வேளையில் 8 பயணிகளுடன் விகோ நகரம் நோக்கி பேருந்து சென்றுக்கொண்டிருந்த நிலையில் மழை பெய்ததன் காரணமாக சாலையில் பேருந்தின் டயர்கள் வழுக்கியதால் பாலத்தின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்தது.

ஓட்டுநர் உட்பட இருவர் உயிருடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 3 பேர் உயிரிழந்த நிலையில் எஞ்சிய 4 பேரை தேடும் பணிகள் விடிய விடிய தொடர்ந்து நடைபெற்றன. கனமழையைத் தொடர்ந்து ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மீட்பு பணிகளில் சிறு தொய்வு ஏற்பட்டது.

No comments: