News Just In

6/09/2022 10:24:00 AM

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் உலர் உணவுப்பைகள் வழங்கி வைப்பு !




நூருல் ஹுதா உமர்

முஸ்லிம் உரிமைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் தேவையுடைய மற்றும் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்களுக்கு பாகிஸ்தான் தூதரக அனுசரணையுடன் உலர் உணவுப்பைகள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை கொழும்பு மாளிகாவத்தை பிரதீபா மண்டபத்தில் நடைபெற்றது.

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்க்கி பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் கொழும்பு மாநகர சபை ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் சார்பிலான மாநகர சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மான், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் முஸம்மில், முஸ்லிம் உரிமைக்கான அமைப்பின் சார்பாக செயலாளர் ரூமி அமித் மற்றும் பொருளாளர் ஜவ்பர் ஹாஜி ஆகியோர் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது அடையாளம் காணப்பட்ட மக்களுக்கு பொதுமக்களுக்கு பாகிஸ்தான் தூதரக அனுசரணையுடன் உலர் உணவுப்பைகள் வழங்கி வைக்கப்பட்டது.


No comments: