News Just In

6/05/2022 06:13:00 PM

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் பால் மா விலைகள்!

நாட்டில் கடந்த 31 ஆம் திகதி சில வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், கட்டாயம் பால் மாவின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என தேசிய மற்றும் வெளிநாட்டு பால் மா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அத்தியவசிய உணவுப் பொருட்களுக்கு பெறுமதி கூட்டல் வரி அறவிடப்படுவதில்லை.

இருப்பினும், பால் மாவுக்கு இந்த வரி அறவிடப்படுமா அல்லது இல்லையா என்பதை அரசாங்கம் உறுதியாக தெரிவிக்கவில்லை.

பால் மாவுக்கு பெறுமதி கூட்டல் அறவிடப்படா விட்டாலும் விசேட சந்தை பொருள் வரி உட்பட சில வரிகள் கொண்டு வரப்பட்டுள்ளதால், மீண்டும் ஒரு முறை பால் மாவின் விலைகளை அதிகரிக்க நேரிடும்.

மேலும் அமெரிக்க டொலருக்கு ஈடாக ரூபாய் மதிப்பிழந்துள்ளமையும் விலைகள் தொடர்பில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை ரூபாவின் பெறுமதி 40 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

No comments: