அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர், பிரதமர் மகிந்த ராஜபக்சவை போன்று உடையணிந்து, சிவப்பு நிற சால்வையுடன் சடலமாக காட்சியளித்துள்ளார். இதன்போது மலர்வளையம் வைத்து அந்த நபருக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
அரச தலைவர் மற்றும் பிரதமர் உள்ளிட்டவர்கள் உடனடியாக பதவிவிலக வேண்டும் எனக் கோரி நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அரச தலைவர் செயலகம் மற்றும் அலரி மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கப்பட்டுள்ளனர்.
போராட்ட களத்தில் நேற்று பதற்ற நிலை ஏற்பட்டதுடன், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய போராட்டத்திற்காக அலர மாளிகைக்கு முன்பாக கட்டப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களை அகற்றுவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இருப்பினும் குறித்த பகுதியில் தற்காலிக கூடாரங்கள் மீண்டும் அமைக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments: