News Just In

5/28/2022 07:56:00 PM

தென்னிலங்கையில் கலவரம்..! அதிகரிக்கும் பதற்ற நிலை - காவல்துறை எதிர் தாக்குதல்!

அரச தலைவர் உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலிறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் இன்று 50 ஆவது நாளாக இடம்பெற்று வரும் நிலையில், இன்று காலிமுகத்திடல் பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட போது அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தப்போராட்டம் கொழும்பு கொளுப்பிட்டி பகுதியில் ஆரம்பித்து காலிமுகத்திடல் கோட்டா கோ கமவை வந்தடைந்துள்ளது.

இப்போராட்டத்தில் மதகுருமார்கள், தொழிற்சங்கத்தினர், கலைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வந்த நிலையிலேயே இப் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது உலக வர்த்தக மையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கண்ணீர்புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

No comments: