15 வயதுடைய பாடசாலை மாணவன் முதலைக்கு இரையாகிய நிலையில், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கெக்கிராவ – கல்கிரியாகம, மானேருவ பிரதேசத்தை சேர்ந்த மாணவனே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவர்.
நேற்று மாலை நண்பர்கள் இருவருடன் நீராடச் சென்ற போதே முதலை கடிக்கு உள்ளானதாகவும் உடனடியா பிரதேச மக்களும், கல்கிரியாகம காவல்துறையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போதும் மாணவனை மீட்க முடியவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவனின் காலில் முதலை கடித்துள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, மாணவனின் சடலம், பிரேத பரிசோதனைக்காக தம்புள்ளை வீர டென்சில் கொப்பேகடுவ ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
No comments: