(நூறுள் ஹுதா உமர்)
சாய்ந்தமருது கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் மருதூர் பிரீமியர் லீக் (எம். பி.எல் -2021/22) கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் காலிறுதி ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இம்பேசியல் நடுவர் சங்கத்தின் இணை அனுசரனையில் பிரதேசத்தின் 32 முன்னணி கழகங்கள் பங்கு கொள்ளும் இச்சுற்றுப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் காத்தான்குடி பூநச்சிமுனை விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து காரைதீவு விவேகானந்த விளையாட்டு கழகம் விளையாடியது.
இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற விவேகானந்த விளையாட்டுக் கழகத்தினர் முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்தனர். அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய காத்தான்குடி பூநச்சிமுனை விளையாட்டுக் கழகத்தினர் நிர்ணயிக்கப்பட்ட 15 பந்து வீச்சு ஓவர்கள் முடிவில் 05 விக்கெட்டுகளை இழந்து 98 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
99 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய காரைதீவு விவேகானந்த விளையாட்டு கழகத்தினர் 12.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து 07 விக்கெட்டுகளால் வெற்றியை தனதாக்கிக் கொண்டனர். இப்போட்டியில் ஆட்ட நாயகனாக காரைதீவு விவேகானந்த விளையாட்டு கழக வீரர் தெரிவானார்
No comments: