News Just In

3/13/2022 06:14:00 AM

பேரீச்சம்பழ இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானம்!

பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

எதிர்வரும் மாதம் முஸ்லிம்களின் ரமழான் நோன்பு ஆரம்பிக்கப்படுவதால் பேரீச்சம்பழம் மீதான இறக்குமதி தடையால் அவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்பு குறித்து முஸ்லிம் எம்.பிக்கள் நேற்றையதினம் பிரதமர் மகிந்தவின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பேரீச்சம்பழம் மீதான தடையை நீக்குமாறு உடனடியாக பணிப்புரை வழங்கியுள்ளார். இதன்படி விரைவில் புதிய வர்த்தமானி வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவலை பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.

No comments: