இலங்கையில் இன்றுமுதல் புதிய பேருந்து சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி நடத்துனர் இல்லாமல் பேருந்து போக்குவரத்தை முன்னெடுக்கும் புதிய திட்டமே இன்று (30) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தன்னியக்க கட்டண முறையொன்றை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இதேவேளை இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டால் புதுவருடத்துடன் பலருக்கு தொழில் வாய்ப்பு இல்லாமல் போகும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments: