திருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில், சனிக் கிழமை 30-10-2021 காலை 10.00 மணிக்கு, திருகோணமலை ரோட்டரி கழகத்தின் தலைவர் திரு.த.அகிலனின் வேண்டுகோளின்படி, ரோட்டரி கழக உறுப்பினர்களால் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சேருவளை பிரதேசத்தின் உப்பூரல் மற்றும் சீனன்வெளி கிராமங்களில் உள்ள 14 வயதிற்குட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு, ஒருவருக்கு 2 பால்மா பாக்கெட்டுகள், சீனி, பிஸ்கட்டுகள் அடங்கிய 70 பொதிகள் வழங்கிவைக்கப்ப் பட்டன.
அச்சமயம் ரோட்டரி கழக உறுப்பினர்களான செயலாளர் பிரபாகரன், அடுத்த தலைவர் கிருட்ணதாஸ் Rotary Foundation Chairman ரகுராம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பாடசாலை அதிபர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்..
இதற்குரிய நிதி லண்டனில் வசிக்கும் திரு. பாலா கனகசபை அவர்களாலும் கனடாவை சேர்ந்த ஆனந்தன் தர்மா அவர்களாலும் வழங்கப்பட்டது.
எப்.முபாரக்
No comments: