News Just In

12/30/2020 09:21:00 PM

இன்று மாத்திரம் 636 பேருக்கு கொரோனா- மொத்த எண்ணிக்கை 42,999ஆக அதிகரிப்பு!!


இலங்கையில் இன்று மட்டும் 636 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 42ஆயிரத்து 999 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 698 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 34 ஆயிரத்து 623 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இன்னும் ஏழாயிரத்து 881 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 195 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: